Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

நடிகை சினேகா மறைத்த விஷயம்! வெளியான ரகசியம்!

சுகாசினி இராசாராம் நாயுடு என்ற இயற்பெயர் கொண்ட நடிகை சினேகா ஒரு காலத்தில் முன்னணி தென்னிந்திய திரைப்பட நடிகையாக இருந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றதிற்காகவும், நடிப்புத் திறனுக்காகவும் ரசிகர்கள் இவரை விரும்புகின்றனர்.

2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு இவர் அறிமுகமானார்.

தமிழில் ‘என்னவளே’ படத்தின் மூலம் அறிமுகமான அவரின்  சிரிப்பழகு தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இவரின் குடும்பப்பாங்கான அழகும், அமைதியான நடிப்பும் ஒரு சில படங்களிலேயே இவரை முன்னணி நடிகையாக ரசிகர்கள் முன் நிலை நிறுத்தியது.

பல முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பலருடன் நடித்த இவர், பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் குழந்தை பிறந்த பிறகு வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். 

சமீபத்தில் ஓரிரு வாரத்திற்கு முன்பு, இவர் பாஞ்சாலியாக நடித்த ‘குருஷேத்திர’ என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் மஹாபாரதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பிரமாண்ட படம். 

இதனால் தொடர்ந்து நடிகை சினேகா, இது போன்ற நல்ல கதையுள்ள திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை சினேகா, இரண்டாவது முறையாக மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் மீண்டும் சினேகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்துவது என்பது சந்தேகம் தான். மேலும் இப்படி வெளியாகியுள்ள தகவல் குறித்து சினேகா – பிரசன்னா இருவருமே வாய் திரைக்கதை நிலையில், இது பற்றிய  தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால்,இது போன்ற வதந்திக்களுக்கு உருவம் கொடுக்கும் வகையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் படத்திற்கு பின் அடுத்து எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார் நடிகை சினேகா. எனவே, நடிகை சினேகா மீண்டும் கர்பமாகியுள்ளார் என்றே தெரிகின்றது.

Leave a Comment