Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!!

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இது குறித்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தியை, எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது.
இந்த சிறை தண்டனை காரணமாக, அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத நிலையுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 3 ம் தேதி, அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment